search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சீரான குடிநீர்"

    • ஒரு வாரத்துக்கும் அதிகமாக சீரான குடிநீர் வினியோகம் இல்லாததால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • புதிய கூட்டுக்குடிநீர் திட்டத்தில், சோதனை ஓட்டத்தின் போதே பிரச்சினைகளை கண்டறிந்து தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்றனர்.

    மடத்துக்குளம்:

    மடத்துக்குளம் ஒன்றியம் துங்காவி, காரத்தொழுவு மற்றும் மெட்ராத்தி ஊராட்சிக்கு திருமூர்த்தி அணையை ஆதாரமாகக்கொண்ட கூட்டுக்குடிநீர் திட்டம் வாயிலாக குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இத்திட்ட குழாய்கள், திருமூர்த்தி அணையில் இருந்து மடத்துக்குளம், கணியூர் வழியாக திட்ட கிராமங்களுக்கு செல்கிறது. இதில்உடையார்பாளையம் நீர் உந்து நிலையத்தில் இருந்து, துங்காவி, மெட்ராத்தி மற்றும் காரத்தொழுவு ஊராட்சிகளுக்கு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக மின்தடை, பிரதான குழாய் உடைப்பு, புதிய குடிநீர் திட்டத்துக்கான சோதனை ஓட்டம் உள்ளிட்ட தொழில்நுட்ப காரணங்களால் குடிநீர் வினியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஊராட்சி நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.

    ஒரு வாரத்துக்கும் அதிகமாக சீரான குடிநீர் வினியோகம் இல்லாததால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குடிநீருக்காக உள்ளூர் நீராதாரங்களை தேடிச்செல்ல வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து ஊராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது: - உடையார்பாளையம் நீர் உந்து நிலையத்தில் இருந்து, மூன்று ஊராட்சிகளுக்குட்பட்ட 25 கிராமங்கள் வரை பயன்பெற்று வருகின்றன. ஒரு வாரமாக வினியோகத்தில், பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு வருகிறது.

    அதிக கிராமங்கள் பயன்பெறுவதால் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் தொழில்நுட்ப பிரச்சினைகளை தவிர்க்க குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும். புதிய கூட்டுக்குடிநீர் திட்டத்தில், சோதனை ஓட்டத்தின் போதே பிரச்சினைகளை கண்டறிந்து தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்றனர்.

    குடிநீர் வடிகால் வாரியத்தினர் கூறுகையில், மடத்துக்குளம் ஒன்றிய கிராமங்களுக்கு திருமூர்த்தி அணையை ஆதாரமாகக்கொண்டு புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அத்திட்டத்துக்கான சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்படுவதால் வினியோகம் பாதித்துள்ளது. விரைவில் வினியோகம் சீராகும் என்றனர்.

    • சென்னிமலை பேரூராட்சி பகுதி மக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும்.
    • இல்லை என்றால் பொதுமக்கள், முருக பக்தர்களை திரட்டி போராட்டம் நடத்துவோம்.

    சென்னிமலை:

    சென்னிமலை ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் கோபாலகிருஷ்ணன், பேரூர் செயலாளர் ரமேஷ், பேரூராட்சி கவுன்சிலர் சத்தி ரசேகர் தலைமையில் முன்னாள் தலைவர்கள், முன்னாள் கவுன்சிலர்கள், அ.தி.மு.க., நிர்வாகிகள் என 200-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து சென்னிமலை பேரூராட்சி செயல் அலுவலர் ஆயிஷாவிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    சென்னிமலை பேரூ ராட்சி பகுதி மக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும். சென்னிமலை முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு வழங்க போடப்பட்ட குடிநீர் இணைப்பு துண்டித்ததை மீண்டும் வழங்க வேண்டும்.

    இதை உடனடியாக 2 வாரங்களுக்குள் சரி செய்ய வேண்டும். இல்லை என்றால் பொதுமக்கள், முருக பக்தர்களை திரட்டி போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

    இதில் அவைத்தலைவர் ஆதவன், துணை செய லாளர் சாவித்திரி, பொரு ளாளர் காவேரி ரங்கன், முன்னாள் பேரூராட்சி தலைவர்கள் கோபால கிருஷ்ணன், ஜம்பு என்கிற சண்முகசுந்தரம், மாவட்ட பிரதிநிதி மாரப்பன், மெட்றோ டெக்ஸ் தலைவர் கோவிந்தசாமி,

    முன்னாள் பேரூர் செயலாளர் கொங்கு கந்தசாமி, முன்னாள் பேரூ ராட்சி துணைத்தலைவர் இளங்கோவன், மகளிரணி சாந்தி, வார்டு செயலா ளர்கள் சூளை ஈஸ்வரன், ரமேஷ், சுப்பிரமணி, கே.அண்ணா துரை,

    பழக்கடை குமார், தாரை. லட்சு மணன், லோகு, பழனிச்சாமி, முன்னாள் கவுன்சிலர் மூர்த்தி, ரமேஷ், திருநாவு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • முருகம்பாளையம் கிராமத்தை சேர்ந்த பெண்கள் கொடுமுடி யூனியன் அலுவலகத்திற்கு திரண்டு வந்து வட்டார வளர்ச்சி அலுவலர் பத்மனாபனிடம் மனு கொடுத்தனர்.
    • சுமை தாங்கி பகுதியில் தற்போது போர் போட்டு டேங்க் கட்டப்பட்டு உள்ளது. அதில் இருந்து எங்களுக்கு குடிநீர் வழங்கிட ஆவண செய்ய வேண்டும்.

    கொடுமுடி:

    கொடுமுடி அருகே அய்யம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்டது முருகம்பாளையம். இக்கிராமத்தை சேர்ந்த பெண்கள் கொடுமுடி யூனியன் அலுவலகத்திற்கு திரண்டு வந்து வட்டார வளர்ச்சி அலுவலர் பத்மனாபனிடம் மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்ப தாவது:

    எங்கள் பகுதி நொய்யல் ஆற்றங்கரையில் உள்ளது. இதனால் நிலத்தடி நீர் அனைத்தும் மாசுபட்டு உள்ளதால் அனைத்து ஆழ்குழாய் கிணறுகளும் மூடப்பட்டு விட்டன. காவிரி கூட்டுக் குடிநீர் திட்டமும் சரியாக செயல்படுவதில்லை. வீட்டுக்கு 2 குடம் குடிநீர் கிடைப்பதே அரிதாக உள்ளது.

    மேலும் அங்கன்வாடி மையம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளுக்கும் குடிதண்ணீர் பற்றாக்குறை உள்ளது.எனவே சுமை தாங்கி பகுதியில் தற்போது போர் போட்டு டேங்க் கட்டப்பட்டு உள்ளது. அதில் இருந்து எங்களுக்கு குடிநீர் வழங்கிட ஆவண செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் அதில் கூறியுள்ளனர்.

    மனுவை பெற்றுக் கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர் உடனடியாக ஊராட்சி செயலாளரை தொடர்பு கொண்டு குடி தண்ணீர் காலை, மாலை 2நேரமும் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

    ×